Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் இல்லம் தேடி சென்று பாதாள வாராகி அம்மன் பூஜை நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. 200 வருடங்கள் பழமையான கோவிலில் ஸ்ரீபாதாள வராகி அம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ ஓம் காளீஸ்வரர் சிலைகள் நிறுவப்பட உள்ளது.
இந்த சிலைகளை நான்கு சக்கர வாகனத்தில் வைத்து சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுதோறும் வழிபாட்டிற்கு அழைக்கும் பக்தர்களின் இல்லங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து ஆயில்பட்டி ,மெட்டாலா, உரம்பு, திம்மநாயக்கன்பட்டி, ஒண்டிக்கடை, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பக்தர்களின் வீட்டிலேயே சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தங்களின் இல்லம் தேடி வந்து பூஜை செய்வதனால் செல்வம் செழித்து வளம் பெரும் என பொதுமக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இத்திறப்பு பூஜையை கோவில் சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் முன்நின்று நடத்தி வருகிறார்.